வாழ்க வளமுடன்

தேலையில்லாத ஆசை என்றால் அமைதியாகச் சிந்திப்பது நல்லது. "இந்த ஆசை எழுந்ததே தவறு; இதை நிறைவு செய்தால் பல துன்பங்கள் வருமே; எனவே இந்த ஆசையை நான் விட்டு விடுவேன்" என்று தெளிவாக எண்ணி, தவம் இயற்றிச் சங்கற்பம் மேற்கொள்ள வேண்டும். பின்னொருகால் இந்த ஆசை மனதில் தோன்றினாலும், முன்பே எடுத்து வைத்திருக்கும் முடிவும் கூடவே வந்து, அந்த ஆசையானது காலப் போக்கில் மறையும்.

         அதே போல் தேவை என்று கண்டவிடத்தும், நிறைவு செய்ய வசதி இல்லை என்றாலும் முன் சொன்னது போலவே ஆராய்ச்சியும் சங்கற்பமும் கூட பின் விளைவு தீங்கு தருவதென்றால், அந்த ஆசையையும் முன் சொன்ன அதே முறையில் சமம் செய்து கொள்ள வேண்டியது தான். நிறைவும் செய்யாமல் மாற்றவும் செய்யாமல் ஆசைகளை மனதில் சுமந்து கொண்டிருந்தால் மன அமைதி கெடும். உடலில் குன்மம் முதலிய நோய்கள் உண்டாகும்.

         ஒரு ஆசையை இம்மாதிரி மனதில் வைத்திருக்கும் காலத்தில் எடுத்த காரியங்களிளெல்லாம் செயல் வேகம் குன்றி, திறமை மழுங்கி, தோல்வி ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். ஆசை, திட்டமிடல், செயல் (desire, approach, achievement) மூன்றும் சரியாக இருந்தால் வெற்றி மேல் வெற்றி வந்து கொண்டேயிருக்கும்.
--  யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

No Responses to "வெற்றி மேல் வெற்றி"