வாழ்க வளமுடன்

Showing posts with label குடும்ப அமைதிக்கு மனவளக்களை. Show all posts

கணவன்-மனைவி, அவர்களின் பெற்றோர்கள், குழந்தைகள் சேர்ந்து இருப்பது தான் குடும்பம் எனப்படுகிறது. பொருள் ஈட்டும் திறன் வாழ்க்கை அனுபவம் இரண்டும் இணைந்தால்தான் மனிதன் வாழ்வு அமைதியாக நிறைவாக நன்கு நடைபெறும். குழந்தைகளுக்கு இந்த இருவகையும் தெரியாது. வயது முதிர்ந்தவர்களால் (பெற்றோர்) பொருள் ஈட்ட முடியாது. வாலிபப் பருவத்தினர்கள்தான் உழைத்துப் பொருள் ஈட்ட வேண்டும். அதைக் குழந்தைகளும் முதியோர்களும் கூடித் துய்த்துக் குறையின்றி வாழ வேண்டும். இது இயற்கை நியதி. இதனை மாற்ற முடியாது. இந்த இயற்கை நியதியானது பெற்றோர் மக்கள் பராமரிப்புக் கடமையாக மாறி அது செயலாகும்போது அதைத்தான் குடும்பம் எனகிறோம்.

குடும்பத்தில் ஒருவர் தேவைகளையும் வருப்பங்களையும் மற்றவ் மதித்து, உதவி, தன் தேவை விருப்பங்களை கட்டுப்பாட்டோடு முடித்துக் கொள்ள வேண்டிய வாழ்க்கை அறத்தை, கணவன்-மனைவி இருவருமே உயிர்பால் காக்க வேண்டும். இத்துறையில் அடையும் வெற்றியின் அளவே குடும்பத்தில் அமைதியும் செழிப்பும் இனபமும் அமையும்.

அவரவர்கள் பிறவித் தொடர்பாக உள்ள உண்மை உருவங்கள் அவரவர்களுடைய குழந்தைகளே. அவர்கள் எதிர்காலத்தில் செம்மையாக வாழவும், குடும்பக் கடமைகளை பொறுப்போடு நிறைவேற்றவும் ஊருக்கும் உலகுக்கும் பயனுள்ள முறையில் நடந்து கொள்ளவும் ஏற்றவகையில் கல்வி, ஒழுக்கம், தொழில், திறன், கடமையுணர்வு இவை உடையோர்களாக ஆக்க வேண்டியது பெற்றோர் கடமை. இதை உடல், பொருள், ஆற்றல் என்ற மூன்றிலும் எந்த அளவு விட்டுக் கொடுத்தேனும் நிறைவேற்ற வேண்டும். அதேபோல் நமது பெற்றோர்களின் வயது முதிர்ந்த காலத்தில் அவர்களின் வாழ்க்கை அனுபவங்களையும் உரிய மதிப்போடு வைத்துக் கொள்வதால் அந்த குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் அமையப்பெறுகிறது.

மனிதனுக்கு பிறப்பு, வளர்ச்சி, முதிர்வு என்பது இயற்கை நியதி. அதனால் இதை உணர்ந்து தனி மனிதனாக வாழ்வது அரிது. இதனால் உலகில் வாழ்வதற்கு குடும்பம் மிக இன்றியமையாததாகிறது.

உலக சமாதானம் வேண்டுமானால் முதலில் அதற்கு மனித மனதில் அமைதி வந்தாக வேண்டும். தன்னிலை விளக்கத்தின் மூலம்தான் அந்த அமைதி வரமுடியும். தன்னிலை விளக்கத்தை நீங்கள் பெற்றுள்ளீர்கள். அதனைப் பெற்றுவிட்டால் மட்டுமே வந்துவடாது. தன்னிலை விளக்கம் என்றவிளக்கின் வெளிச்சத்தில் உங்கள் வாழ்க்கையைத் திட்டமிட்டு நடத்த வேண்டும். அவ்வெளிச்சத்தில் நீங்கள் வாழும் முறையைச் சோதித்துக் கொள்ள வேண்டும்.

உங்கள் குடும்பத்தில் அமைதி இருக்கிறதா? என ஆராயுங்கள். எல்லோர் வாழ்க்கையிலும் பிணக்குதான் மலர்ந்திருக்கின்றது. பிணக்கானது சிலர் வாழ்க்கையில் சிறியதாகவும் வேறுபலர் வாழ்க்கையில் பெரியதாகவும் இருக்கலாம். பிணக்கில்லாத வாழ்க்கை அமைந்தவன் ஞானி. ஒருவர் பற்றி பரிசோதிக்க கருவி ஒன்று இருக்குமேயானால் அது அவரது குடும்பத்தின் அமைதிதான்.

நீங்கள் கற்க வேண்டிய எல்லா பாடங்களையும் குடும்பத்துக்குள்ளேயே கற்றுக் கொள்ளலாம். மனித இயல் பாடங்களும் கற்கலாம். ஒரு பல்கலைக் கழகத்தையே கூட குடும்பத்துக்கள்ளேயே காணலாம்.
மனைவிக்குத் தெரியாமல் கணவனோ கணவனுக்குத் தெரியாமல் மனைவியோ சம்பாதிப்பதும், செலவு செய்வதும், சேர்த்து வைப்பதும் பின்னால் பணக்குக்கு இடம் தரும். அதனால் இவர்களுக்குள் இருக்க வேண்டிய தெய்வீக உறவு (divine partnership) இருக்காது. எவ்வகையிலும் ஒருவருக்கொருவர் தெரியாமல் வாழக்கூடாது. மனதில் ஒளிவுமறைவு வைத்துக் கொண்டால் குடும்பத்தில் அமைதி வராது.

சிறிய காரணத்திற்காகவும், பெரிய காரணத்திற்காகவும் குடும்பத்தில் பிணக்கு எழலாம். எல்லாக் காரணத்தையும் தொகுத்து, பகுத்து நான்காக்கியிருக்கிறேன். அவை 1. தேவை 2. அளவு 3. தன்மை 4. காலம். இவற்றால் ஒன்றையோ அல்லது இரண்டையோ அல்லது அனைத்தையும் கூட மையமாக வைத்துதான் பிணக்குகள் எழும்.

நோயற்றவாழ்வும் குறைவற்றசெல்வம் இதைத்தான் எல்லோரும் விரும்புகிறோம். நோயற்றஉடலை உடையவர்கள்தான் அமைதியாக மகிழ்ச்சியாக வாழமுடியும். அவர்கள் அறிவும் திறன்பட இயங்கும்.

உடலில் ஏற்கனவே இருக்கிற நோய்களைப் போக்கிக் கொள்வதை சிகிச்சை என்று சொல்வார்கள். அதைவிட சிறந்தத் என்னவென்றால் நோய் வராமலேயே தடுத்துக் கொள்வது (prevention) ஆகும்.

நமது உடல் பஞ்சபூதங்களால் ஆனது. இதில் ஆகாசம் (விண்) உயிராகவும், நிலம் பரு உடலாகவும், மற்ற மூன்று பூதங்களும் இவற்றிற்கிடையே காற்று ஓட்டம், வெப்பஓட்டம், இரத்த ஓட்டமாகவும் உள்ளன. மேலும் உயிரில் இருந்து வரும் காந்த அலையும் பரு உடலை பிடித்து வைத்துள்ளது. இதை எல்லாம் சரியாக, முறையாக இருப்பதற்கு அமைந்த பயிற்சி தான் அருட்தந்தையின் எளியமுறைஉடற்பயிற்சி.

எளிய முறை உடற்பயிற்சி 7 கட்டமாக பிரித்து கை, கால், நுரையீரல், கண், கபாலபதி, மகராசனம், அக்குபிரஷர், உடல் தளர்த்தல் என உடலின் உள் உறுப்புகளுக்கு பயிற்சியாக அமைகிறது. அதனால் நாம் நோயற்றவாழ்வு வாழ முடியும்.

குடும்பத்தில் ஒருவருக்கு நோய் ஏற்பட்டால் அனைவருக்கும் அது துன்பமாகவும், பொருள் நுட்பமாகவும், நேரமின்மையாகவும் அமையும். அதைத் தொடர்ந்து உறவுகளில் பிரிவு, இப்படி அமைதியிழந்து இருக்கும். அதனால் கடும்பத்தில் அமைதி வேண்டுமானால் உள்ளதை உணர்ந்து அல்லதை வட்டு நல்லதை செய்வோம் என்பதற்கு எடுத்துக்காட்டாக எல்லோரும் எளியமுறை உடற்பயிற்சி செய்து சிறப்புடனும் அமைதியுடனும் வாழ்வோம்.

நாம் வாழும் காலத்தில் உடலையும் மனதையும் சரிபடுத்திக்கொண்டால் நமக்கு பின்னால் பிறக்கக் கூடிய குழந்தைகள் ஆரோக்கியமான கட்டமைப்பு கொண்டவர்களாகத் திகழ்வார்கள். அவ்வாறு நல்ல குழந்தைகளை உலகிற்குத் தருவதற்கு நாம் உடற்பயிற்சி, உளப்பயிற்சி செய்து நாளுக்கு நாள் மகிழ்ச்சியும் இனிமையும் பெற்று அமைதியாக வாழ்வோமாக.

மனம் தான் மனித வாழ்க்கையின் விளைநிலம். மனத்தின் தன்மை எதுவோ அதுதான் மனிதனுடைய தன்மை.

மனதை அடக்க நினைத்தால் அலையும். மனதை அறிய நினைத்தால் அடங்கும்.

தினந்தோறும் சமையலறையில் பாத்திரத்தை உபயோகிக்கிறோம். அதனைச் சுத்தம் செய்து வைத்தால்தானே மறுநாளைக்கு நன்றாக இருக்கும். அதுபோல் தினந்தோறும் நாம் நம்முடைய வாழ்க்கையில் மனதை அலைய விட்டுக்கொண்டு அதனால் உடலையும் இன்னும் வாழ்க்கையில் உள்ள நலன்களையும் குழப்பம் செய்துகொண்டும் குடும்பத்தில் அமைதி இழந்து வாழ்கிறோம். அதற்கு தினந்தோறும் அருட்தந்தையின் எளியமுறைதியானப்பயிற்சி மூலம் மனதைச் சுத்தப்படுத்தி மனத்தை அதன் உண்மை நிலைக்கு கொண்டு வந்து வைக்க வேண்டும்.
தியானம் – மனம் எங்கிருந்து பறப்படுகின்றதோ அது புறப்படுகின்ற இடத்திலேயே மனதைக் கொண்டு வந்து நிலைநிறுத்தப் பழகுவது என்பது தான் தியானம். உயிரினுடைய படர்க்கை நிலை மனம்.
மனம் – எண்ணம் இரண்டும் ஒன்றேதான். அகத்தவத்தால் எண்ணத்தை ஆராய்ந்தால் அங்கு உயிராக இருக்கும் அறிவை அறியலாம். அதற்கு தவப்பயிற்சி உதவும்.

இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து, விடாமுயற்சியுடன் செய்ய தொடங்கினோமேயானால் மனதை ஒழுங்கு படுத்திக் கொண்டு தன்னைப்பற்றி தெளிவாகத் தெரிந்து கொண்டு பூரண நிலையைப் பெற்று வாழ்வாங்கு வாழமுடியும்.

அகத்தவத்தால் ஐம்பலனை அடக்கி அறிவறிந்திடலாம் !
அகத்தவத்தால் ஆறுகுண ஆளுமைப் பேறடைந்திடலாம் !
அகத்தவத்தால் இல்லறத்தை அன்பகமாய் ஆற்றிடலாம் !
அகத்தவத்தால் அனைத்துயிர்கள் அருநட்பை பெற்றிடலாம்.


பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருக்க கூடிய மனத்தின் பழக்கத்தை முறையாக மாற்றிக் கொள்ள, நல் விளக்கத்தை பெற்று அதன் வழியே வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முறையான பயிற்சிதான் மனவளக்களை. அதில் உள்ள அனைத்தும் தவத்தால் மனதில் ஓர்மை, கூர்மை, நேர்மை என மாற்றப்பெறுவதால் குடும்பத்தில் அனைவரும் அமைதிகாத்து வாழ முடியும்.

உலகம் எந்த பழக்கங்களிலே வாழ்ந்து வர்கின்றதோ அந்த வழியே, பெற்றோர்களின் பழக்க வழியே, நாமும் சென்று அவற்றையே பழக்கப்பதிவுகளாக்கிக் கொண்டு வாழந்து வருகின்றோம். இவற்றிலே உண்மை நிலை அறிவதற்காகவே ஆறாவது அறிவு கொண்ட இந்த மனித உடல் வந்த போதிலும் கூட அந்த இலட்சியத்தை மறந்து சாதாரணமாகப் பொருள் ஈட்டு அறிவு பலன்களிலே எல்லைகட்டி உணர்ச்சி வயப்பட்ட அறுங்குணங்களாக அடிக்கடி மாறிப் பல செயல்களைச் செய்து வருக்கின்றோம். இதுவே பழக்கமாகி அந்த பழக்கத்தின் வழியே பெரும்பாலும் வாழ்ந்து வருகின்றோம்.

இந்த நிலைமையிலிருந்து நம்மை அமைதிபடுத்திக்கொண்டு கடும்பத்தில் அமைதி காணவும், உலகில் மனித கலத்திலே அமைதி விளைவிக்க வேண்டும். இதற்கு தற்சோதனை (அகத்தாய்வு) மனித இனத்துக்கு மிக மிக அவசியமானது.

தன்னைப்பற்றி தன்தேவையைப் பற்றி தன் செயலின் விளைவைப் பற்றி, தன் தகுதியைப் பற்றி, தன் மதிப்பை பற்றி ஆராய்வது தற்சோதனை.

இந்த தற்சோதனையில் பெறும் தெளிவைக் கொண்டு எடுக்கும் முடிவையும் தவத்தினால் மனத்திற்கு கிடைத்திற்கும் உறுதியைக்கொண்டு வாழ்வில் எதிர் காலச் செம்மைக்குப் பயன்படுத்திக் கொள்ளும் போது கிடைப்பதுதான் குணநலப்பேறு. இதன் மூலம் நமக்கு நமது குடும்பத்தில் அமைதி, மகிழவு, நிறைவு பெறுகிறோம்.