பிறப்பினிலைமை.
by thirukumaran | Saturday, September 11, 2010 | In by மகான்கள் | 1 COMMENT
| ஆதியாய் நின்ற வறிவு முதலெழுத் தோதிய நூலின் பயன். | (1) |
| பரமாய சத்தியுட் பஞ்சமா பூதந் தரமாறிற் றோன்றும் பிறப்பு. | (2) |
| ஓசைபரிச முருவஞ் சுவை நாற்றம் ஆசை படுத்து மளறு. | (3) |
| தருமம் பொருள்காமம் வீடெனு நான்கும் உருவத்தா லாய பயன். | (4) |
| நிலமைந்து நீர்நான்கு நீடங்கி மூன்றே உலவையிரண் டொன்று விண். | (5) |
| மாயன் பிரம னுருத்திரன் மகேசனோ டாயுஞ் சிவமூர்த்தி யைந்து. | (6) |
| மாலய னங்கி யிரவிமதி யுமையோ டேலுந் திகழ்சத்தி யாறு. | (7) |
| தொக்குதிரத் தோடூன் மூளைநிண மென்பு சுக்கிலந் தாதுக ளேழு. | (8) |
| மண்ணொடு நீரங்கி மதியொடு காற்றிரவி விண்ணெச்ச மூர்த்தியோ டெட்டு. | (9) |
| இவையெல்லாங் கூடி யுடம்பாய வொன்றி னவையெல்லா மானது விந்து. | (10) |
--ஔவையார்





September 11, 2010 at 11:26 AM
feedburner அக்கவுண்ட் மூலம் தேவைப்படுவோர் பதிவு செய்து மின்னஞ்சல் வழியாக இடுகைகளைப் பெற வசதி ஏற்படுத்தலாமே..
பலரையும், தவறாது அனைத்து இடுகைகளும் சென்று சேருமே
வாழ்க வளமுடன்
நிகழ்காலத்தில் சிவா