வாழ்க வளமுடன்


1. பொறுமை, விட்டுக் கொடுத்தல், ஈகை ஆகிய மூன்று பண்புகள்
    குண்டலினியோகிகட்குத் தானாக அமையும். (Tolerance, Adjustment & sacrifice).

  2. இயற்கையின் மறைபொருள்களை உணர முடியும்.

  3. மக்களுக்குள் இருக்கும் வேறுபாடுகள் ஆகிய உருவ அமைப்பு, குணம்,
    அறிவின் உயர்வு, கீர்த்தி, உடல் வலிவு, சுகம், செல்வம் ஆகிய ஏழையும் நல்ல
    நிலைக்கு மாற்றி இணைய வைக்கிறது.

  4. வினைப்பதிவுகளை மாற்றுகிறது.

  5. மனதின் மறுமுனையான தன்னைத் தெய்வத்தோடு இணைக்கிறது.

  6. தன்முனைப்பு, பழிச்செயல் பதிவுகள், வேண்டாப்பற்று என்று
    கூறப்படும் மும்மலங்களையும் நீக்கி விழிப்பு நிலைக்கு வரவழைக்கிறது.

  7. யோகிகள் பற்றறிவினின்று விடுபட்டுக் கற்றறிவில் ஈடுபட்டு முடிவில் முற்றறிவில்
     லயம் ஆவர்.

  8. பிரவிருக்தி மார்க்கத்தினின்று விடுபட்டு நிவர்த்தி மார்க்கத்திற்கு ஈர்க்கிறது.

  9. புலனடக்கம் உண்டாகி அறிவு அமைதியடையச் செய்கிறது.

 10. பிரம நிலையான உண்மை அறிவதற்கு நுண்மையறிவு ஏற்படச் செய்கிறது.

 11. எல்லை கட்டிய தன்மையினின்று விடுபடச் செய்கிறது.

 12. பகுதி அறிவு ஆனது முழுமையை நோக்கிப் பயணம் ஏற்க உதவுகிறது.

 13. மனம் ஓடாது, தன்னை மறவாது மனதைப் பயிற்சிப்படுத்த வேண்டும்.
    மனமே செயல்படும்.

 14. எண்ணம், சொல், செயலால் எவருக்கும், எப்போதும் நன்மையே
    விளைவிக்க நாட்டமாயிருக்கச் செய்யும்.
--  யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

No Responses to "துரியாதீத தவம் - பலன்கள்"