கற்பனை
by thirukumaran | Monday, October 11, 2010 | In by மகான்கள் | NO COMMENTS
கற்பனை மனிதனின் தனித்திறனில் ஒன்று!
முக்கியமான ஒன்று!
கற்பனை மூலம் உணர்ச்சிகளை தட்டி எழுப்பலாம்,
புலன்களை சீவிவிடலாம்,
இல்லாத உலகத்தில் உல்லாசம் கொள்ளலாம்,
இந்த சக்தி உணர்ந்து கொள்ளப்பட வேண்டிய ஒன்று!
தொடர்ந்து ஒன்றைக் கற்பனை செய்தால்,
ஒரு கட்டத்தில் கற்பனை உன்னை.......
உன் புலன்களை, உன் உணர்வுகளை......
ஆட்சி செய்ய ஆரம்பித்துவிடும்,
நீ கற்பனை செய்வதுபோய்.......
கற்பனை உன்னை வயப்படுத்தும், செதுக்கும்!
உணர்வு உலகத்தில் உன்னை உயர்த்தும்,
அல்லது தாழ்த்தும்.
ஆம். உன்னை இழந்து வெறும் உணர்ச்சியாய்,
அல்லது உன்னை கடந்த கடவுள் உணர்வாய்!
இந்த உளவியல் ரகசியத்தைப் பயன்படுத்தி
உலகையே ஆள்கின்றனர்,
மக்களின் கற்பனையைத் தட்டி விட்டு
தங்களிஷ்டப்படி சமுதாயக் கூட்டமாக
செதுக்கி எடுக்கின்றனர்.........
அரசியல்வாதிகள், மதவாதிகள், வியாபாரிகள்,
கொள்கை வெறியர்கள், சினிமா கலைஞர்கள்.
ஆகவே நண்பா!
இந்த திறனை சரியாக திசைப்படுத்தி,
வாழ்க்கையை வாழ வேண்டியது...................
தனிமனிதப் பொறுப்பு!!!!
கற்பனைபோதையில் கட்டுண்ட வாழ்வைப் பார்த்து
பகுத்தறிவுப் பாசறை என்ற பெயரில்
கற்பனைத் திறனை மறுப்பதும் மடமை.
கற்பனைத் திறனை சரியாக வழிப்படுத்துதல் வேண்டும்......
ஆம் நண்பா!
அது மிக எளிது!
கடைபிடிக்க வேண்டிய விதி சுலபம்.
அது
“நீ மறந்து போன உனது உண்மை இயல்புகளை,
நுண்ணிய உணர்வுகளை நோக்கி கற்பனை செய்”!
ஆம்! இதயத்தில் வாழ்வதே உன் இயல்பு,
அதிலிருந்து பிறக்கும் எதையும் கற்பனை செய்!
புலனில் துவங்கினாலும் இதயம் உன்னை
பரவசத்திற்கு இட்டுச் செல்லும்.
இதயமே மனிதனின் தனி இயல்பு,
அது இல்லாத கற்பனை மனதின் சேட்டை மட்டுமே!
இதயத்தின் இனிமைதானே
தாய்மையின் சுகம்,
காதலின் துணிவு,
பக்தியின் பெருமை,
கருணையின் மாட்சி,
ஆகவே கற்பனைத் திறனை இதயத்திலிருந்து வாழு!
ஒரு கட்டத்தில் கற்பனையின் கட்டுப்பாடு
விட்டுப்போகும்!
“நான்” என்பது நழுவிப் போகும்!
ஆம், ஆனால் அன்பு இருக்கும்.
கற்பனை சக்தி கடந்து,
நான் என்ற உன் நிலை கடந்து,
அன்பாய் நீ பரிணமிப்பாய்! உயிர்த்தெழுவாய்!
இது வாழ்வின் உச்சத்தை வாழ்ந்து தொடும் வழி!.
அன்பு வழி! தந்த்ரா வழி!
--நன்றி osho-tamil.com
No Responses to "கற்பனை"
Post a Comment