பூவும் அறிவாளியும்
by thirukumaran | Sunday, October 10, 2010 | In by மகரிஷியின் சிந்தனைகள் | NO COMMENTS
நறுமணம் வீசும் பூச்செடி சேற்றில் முளைத்தாலும் பாதகமில்லை. ஆனால் அதில் பூத்த மலர் சேற்றிலே விழுந்து விட்டால் அது பயனற்றுப் போகும். அதுபோன்ற அறிவாளிகள் பிறப்பு எக்குலத்திலும் எவ்வளவு இழிவாக இருந்த போதிலும் பாதகமில்லை. அவர் ஒழுக்கத்தில் தவறிவிட்டாலும் ஜாதி, மத, தேச, மொழி வெறியில் சந்தர்ப்பவசமாக சிக்கிக்கொண்டாலும் அவர் பயனற்றவராகி விடுகிறார்.
சேற்றிலோ சாக்கடையிலோ விழுந்த பூ அது வரையில்தான் பயனற்றுப்போகும். ஆனால் அறிவாளி தரம் கெட்டு விடுவாராயின் அதைத் தொடர்ந்து எண்ணிறந்த மக்கள் தரம்கெட்டுப்போக நேரிடும்.
சேற்றிலோ சாக்கடையிலோ விழுந்த பூ அது வரையில்தான் பயனற்றுப்போகும். ஆனால் அறிவாளி தரம் கெட்டு விடுவாராயின் அதைத் தொடர்ந்து எண்ணிறந்த மக்கள் தரம்கெட்டுப்போக நேரிடும்.
- வேதாத்திரி மகரிஷி
No Responses to "பூவும் அறிவாளியும்"
Post a Comment