வாழ்க வளமுடன்


* உண்மையில் எதிரி உனக்கு உண்டு என்று சொன்னால், உள்ளத்தில் எழும் ஒழுங்கற்ற எண்ணமே. உண்ணும் உணவு கூட நம் உடல் மட்டும் தான் பாய்கிறது. ஆனால், எண்ணங்களோ பிரபஞ்சத்தின் எங்கும் பாயக்கூடியது.

* தேவைகளைப் பெருக்கிக் கொண்டே போனால், போகத்திலேயே மனம் நாட்டம் கொண்டிருக்கும். அதனால் பிறவித்தொடர் நம்மை விட்டு என்றும் நீங்காது. தேவைகளை முடிந்தவரை சுருக்கமாகவே வைத்துக் கொள்ளுங்கள்.

*எல்லாப் பொருள்களிடத்தும், எல்லா உயிர்களிடத்தும் இறைநிலையைக் காண வேண்டும். அப்படி காணக்கூடிய அளவு அறிவிலும் உயர்வு உண்டாகும்.

* எந்தச் சூழ்நிலையிலும் ஒருவனைச் சினம் அணுகவில்லை என்றால் அவன் ஞானம் பெற்றுவிட்டான் என்று உறுதியாகச் சொல்லலாம்.

* தேவையான இடத்தில் சினம் கொண்டது போல நடிக்கலாமே தவிர, எப்போதும் சினத்தோடு இருப்பது முறையல்ல. போலியாகக் கோபம் கொள்ளும்போது, மனதில் சிறிதும் சலனம் கூடாது. எதிராளியைத் திருத்துவது மட்டுமே அதன் நோக்கமாகும்.

* ஒரு செடியைப் பார்த்தால் கூட வாழ்க வளமுடன் என்று உளப்பூர்வமாக வாழ்த்துங்கள். உலகத்திற்கு நன்மையான செயல்களைச் செய்து அதனால் அனைவரும் மனநிறைவு பெற வேண்டும் எப்போதும் வாழ்த்துங்கள்.

* உடையில் ஒழுக்கம், உள்ளத்தில் கருணை, நடையிலே கண்ணியம் என்று இருப்பதே நல்லோர்களின் பண்பாகும்.

--வேதாத்திரி மகரிஷி

1 Response to "செடியைக் கூட வாழ்த்துங்கள்"

  1. gravatar CS. Mohan Kumar Says:

    தினமும் இத்தகைய நல்ல செய்திகளை படிப்பது மனதுக்கு நிறைவாக, நம்பிக்கை தருவதாக உள்ளது. கடந்த சில மாதங்களாக வாசித்தாலும் இன்று மட்டும் தான் பின்னூட்டம் இடுகிறேன். நிறைய பின்னூட்டம் வராவிடினும், தங்கள் பதிவுகள் பலரும் வாசிக்கிறார்கள்; அனைவருக்கும் மிக உபயோகமாக உள்ளது. தயவு செய்து இதனை நிறுத்தாமல் என்றும் தொடருங்கள்.