உள்ளுணர்தல்.
by thirukumaran | Friday, September 17, 2010 | In by மகான்கள் | NO COMMENTS
எண்ணிலி யூழி தவஞ்செய்திங் கீசனை உண்ணிலைமை பெற்ற துணர்வு. | (81) |
பல்லூழி காலம் பயின்றரனை யர்ச்சித்து நல்லுணர்வு பெற்ற நலம். | (82) |
எண்ணற் கரிய வருந்தவத்தா லன்றே நண்ணப் படுமுணர்வு தான். | (83) |
முன்னைப் பிறப்பின் முயன்ற தவத்தினால் பின்னைப் பெறுமுணர்வு தான். | (84) |
காயக் கிலேச முணர்ந்த பயனன்றே ஓயா வுணர்வு பெறல். | (85) |
பண்டைப் பிறவிப் பயனாந் தவத்தினால் கண்டங் குணர்வு பெறல். | (86) |
பேராத் தவத்தின் பயனாம் பிறப்பின்மை ஆராய்ந் துணர்வு பெறின். | (87) |
ஞானத்தா லாய வுடம்பின் பயனன்றே மோனத்தா லாய வுணர்வு. | (88) |
ஆதியோ டொன்று மறிவைப் பெறுவதுதான் நீதியாற் செய்த தவம். | (89) |
காடுமலையுங் கருதித் தவஞ் செய்தால் கூடு முணர்வின் பயன். | (90) |
--ஔவையார்
No Responses to "உள்ளுணர்தல்."
Post a Comment