சீரிய வழிகள்
by thirukumaran | Wednesday, September 29, 2010 | In by மகரிஷியின் சிந்தனைகள் | NO COMMENTS
நமது குண்டலினியோகம் நான்கு உறுப்புகளைக் கொண்டு உள்ளது. அவை அகநோக்குப் பயிற்சி, தற்சோதனை, மனவினைத் தூய்மை, முழுமைப்பேறு (Meditation, Introspection, Sublimation and Perfection). இந்நான்கும் ஒன்றை ஒன்று தழுவி நிற்கின்றன. ஒன்றால் ஒன்று வளம் பெறுகின்றன. அறியாமையால் வந்த களங்கத்தைப் போக்கி, அதனால் விளைந்த வாழ்க்கைத் துன்பங்களைக் குறைத்து, அமைதியை மனிதனுக்கு அளிக்கவல்லது குண்டலினி தவம். சாதனை செய்து அதன் மூலம் பயனடைய வேண்டிய ஒரு பெரிய நற்பேறு இந்தத் தவம். இதன் மதிப்பு உணர்ந்து பயின்று பயன் பெறுவீர்களாக.
தவத்தில் உட்காரும் போது மனம் ஓடிக்கொண்டே இருக்கிறது என்று சில அன்பர்கள் சலிப்படைகின்றார்கள். இதுதான் இயற்கை நியதி. நாம் வாழ்வில் பெற்ற அனுபவங்கள் யாவும் நம்மிலே பதிவாகி அவை எப்போதும் எண்ணங்களாகப் பிரதிபலித்துக் கொண்டே தான் இருக்கும். இந்தப் பதிவுகளே நமது வாழ்க்கை நியதி. நாம் சில காலம் தவம் பயின்றால் பிறகு நமது மனம் வலிவு பெறும்போது, நாம் எப்போதும் விழிப்பு நிலையில் நம்மைப் பழக்கிக் கொள்ளும்போது, மனம் அலையுறுவது படிப்படியாகக் குறையும். தவம் உயர, உயரத் தற்சோதனையில் ஆழ, ஆழ அந்த அளவிற்கு நமது மனம் நிலைபெறக் காணலாம்.
தவத்தில் உட்காரும் போது மனம் ஓடிக்கொண்டே இருக்கிறது என்று சில அன்பர்கள் சலிப்படைகின்றார்கள். இதுதான் இயற்கை நியதி. நாம் வாழ்வில் பெற்ற அனுபவங்கள் யாவும் நம்மிலே பதிவாகி அவை எப்போதும் எண்ணங்களாகப் பிரதிபலித்துக் கொண்டே தான் இருக்கும். இந்தப் பதிவுகளே நமது வாழ்க்கை நியதி. நாம் சில காலம் தவம் பயின்றால் பிறகு நமது மனம் வலிவு பெறும்போது, நாம் எப்போதும் விழிப்பு நிலையில் நம்மைப் பழக்கிக் கொள்ளும்போது, மனம் அலையுறுவது படிப்படியாகக் குறையும். தவம் உயர, உயரத் தற்சோதனையில் ஆழ, ஆழ அந்த அளவிற்கு நமது மனம் நிலைபெறக் காணலாம்.
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
No Responses to "சீரிய வழிகள்"
Post a Comment