மனோநிலைகளின் பதிவு
by thirukumaran | Saturday, September 11, 2010 | In by மகான்கள் | NO COMMENTS
முதல் படி – உனது மனோநிலைகளைகண்டு வரிசை படுத்து.
உனது நிலைகளை புரிந்துகொள், அதனால் உனது நல்ல மற்றும் மோசமான மனோநிலைகளை குறிப்பெடுக்க ஆரம்பி. ஒவ்வொரு நாளும் காலை, மதியம், மாலை, இரவு ஆகிய 4 தடவை உனது மனேநிலை எப்படி இருக்கிறதென்று குறித்து வை. 3 - 4 மாதங்களுக்குள் நீ ஒருவித லயத்தை காணலாம். உதாரணமாக, நிலவைப் பொறுத்து உன் மனநிலை மாறும்.
இரண்டாவது படி – உனது மனநிலையை சந்திக்க தயாராகு
ஒருமுறை உனது வரைபதிவு எப்படி என்று உனக்கு தெரிந்துவிட்டால் நீ அதற்கேற்ப தயாராகலாம். சோகமாக இருப்பாயானால் சோகத்தை கொண்டாடு. போராட தேவையில்லை.
பிரச்னை எழுவது எங்கென்றால் நாம் மனநிலையை எதிர்க்கிறோம், நாம் அதனுள்ளேயே அமிழ்ந்து விடுகிறோம், இதுதான் போராட்டத்தை உருவாக்குகிறது – ஆனால் எல்லா மனநிலைகளும் அநுபவிக்க கூடியவையே.
மூன்றாவது படி – கவனி, நீ கடந்து போவாய்
உனக்கு நல்ல மனநிலை வரும் என உனக்கு தெரியும்போது நீ மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளலாம், மக்களை சந்திக்கலாம், உருவாக்குபவனாக இருக்கலாம்.
இதேபோல கவனித்து வந்தால் 6 – 8 மாதங்களுக்குள் நீ ஒரு சாட்சியாளனாக மாறி விடுவாய், பின் அப்போது எதுவும் உன்னை பாதிக்க முடியாது. அது இயற்கையின் ஒரு பாகம்தான், உன்னை பொறுத்ததல்ல என்பது உனக்குத் தெரியும். அதை கவனித்தல் மூலமாக நீ கடந்து செல்ல ஆரம்பிப்பாய்.
--ஓஷோ, நன்றி osho-tamil
No Responses to "மனோநிலைகளின் பதிவு"
Post a Comment