வாழ்க வளமுடன்

நூற்றாண்டு தந்த மகான்

by thirukumaran | Saturday, August 14, 2010 | In NO COMMENTS

  வான்தொட்ட மகத்துவமே
        மன்பதையின் புத்துயிரே
   நான் என்ற சிந்தனையை
        நல்வழிக்கு மடைமாற்றி
   கூன் விழுந்த மனம் போக்கி
        கோபுரத்தில் வைத்தவரே
    தீனருக்கும் வாழும் வகை
         செய்தளித்த தவப்பேறே
    தனிமனிதன் ஒழுக்கத்தால்
          தளிர்க்கின்ற நற்குடும்பம்
    பனிமலையாய் தானுயர்ந்து
          பரிமளித்து இப்பாரை

    நனிசிறக்க வைக்குமெனும்
        நல் வேதாத்திரியம் எனும்
   கனியமுதை எமக்கீந்த
       கவின் கடலே வணங்குகிறோம்
    நூற்றாண்டு கண்ட மகான்
        நுவல அரும் தவப்புதல்வன்
    காற்றோடு கலந்நாலும்
       கவிந்திருப்பீர் எம் மனதில்
   போற்றுகிறோம் உம் புனிதம்
      புலம் காக்கும் வேள்வியினை
   நாற்றெடுத்து உம் கொள்கை
       நலம் காக்க யாம் உழைப்போம்

                                                        பேரா.தி.ப.அமிர்தலிங்கம், திருப்பூர்

No Responses to "நூற்றாண்டு தந்த மகான்"