வாழ்க வளமுடன்

ஒவ்வொரு கோளும் பல இரசாயனங்களைக் கொண்டு அவை பரிணாமம் அடைந்ததற்குத் தக்கவாறு அலை வீசிக் கொண்டேயிருக்கும். இரசாயன அம்சங்கள் அடைந்த அந்த அலை எந்தப் பொருள் மீது வீசுகிறதோ, அந்தப் பொருளிலே, அந்த அலையின் தன்மை அத்தனையும் தூண்டிவிடும். ஒன்பது கோள்களினுடைய தன்மையும், அதன் அலைகள் மூலம், நமக்கு வந்து கொண்டேயிருக்கும்.

உலகமும், மற்ற கோள்களும் சூரியனைச் சுற்றிச் சுழன்று கொண்டேயிருப்பதனால் அவ்வப்போது அவற்றின் தூரம் வேறுபடுகிறது. ஒரு சமயம் 10 கோடி மைல் தொலைவிலிருக்கும் ஒரு கோள் இன்னொரு சமயம் 100 கோடி மைல் தொலைவிற்குச் சென்று விடும். அவ்வப்பொழுது கிட்டவோ அல்லது தொலைவாகவோ போகப்போக அந்த அலையினுடைய அழுத்தம் வேறுபடும்.

அதற்குத் தகுந்தவாறு அந்த அலையிலிருந்து வந்து கொண்டிருக்கக் கூடிய, அந்த அழுத்தத்தினால் ஏற்படக்கூடிய விளைவுகளும் வேறுபடும். அதனால் ஒவ்வொரு ஜீவனுக்கும், ஒவ்வொரு உயிருக்கும், அந்தக் கோள்களின் மாற்றத்தினால் இரசாயன வேறுபாடு உண்டாகும். அதைக் கொண்டு உடலுக்கு நன்மை தீமை, அறிவுக்கு நன்மை தீமை இவைகள் எல்லாம் உண்டாகும்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

No Responses to "கோள்களும், ஜீவனும்"