குடும்ப அமைதிக்கு மனவளமும் - தியானமும்
by thirukumaran | Monday, September 24, 2007 | In by குடும்ப அமைதிக்கு மனவளக்களை | 1 COMMENT
மனம் தான் மனித வாழ்க்கையின் விளைநிலம். மனத்தின் தன்மை எதுவோ அதுதான் மனிதனுடைய தன்மை.
மனதை அடக்க நினைத்தால் அலையும். மனதை அறிய நினைத்தால் அடங்கும்.
தினந்தோறும் சமையலறையில் பாத்திரத்தை உபயோகிக்கிறோம். அதனைச் சுத்தம் செய்து வைத்தால்தானே மறுநாளைக்கு நன்றாக இருக்கும். அதுபோல் தினந்தோறும் நாம் நம்முடைய வாழ்க்கையில் மனதை அலைய விட்டுக்கொண்டு அதனால் உடலையும் இன்னும் வாழ்க்கையில் உள்ள நலன்களையும் குழப்பம் செய்துகொண்டும் குடும்பத்தில் அமைதி இழந்து வாழ்கிறோம். அதற்கு தினந்தோறும் அருட்தந்தையின் எளியமுறைதியானப்பயிற்சி மூலம் மனதைச் சுத்தப்படுத்தி மனத்தை அதன் உண்மை நிலைக்கு கொண்டு வந்து வைக்க வேண்டும்.
தியானம் – மனம் எங்கிருந்து பறப்படுகின்றதோ அது புறப்படுகின்ற இடத்திலேயே மனதைக் கொண்டு வந்து நிலைநிறுத்தப் பழகுவது என்பது தான் தியானம். உயிரினுடைய படர்க்கை நிலை மனம்.
மனம் – எண்ணம் இரண்டும் ஒன்றேதான். அகத்தவத்தால் எண்ணத்தை ஆராய்ந்தால் அங்கு உயிராக இருக்கும் அறிவை அறியலாம். அதற்கு தவப்பயிற்சி உதவும்.
இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து, விடாமுயற்சியுடன் செய்ய தொடங்கினோமேயானால் மனதை ஒழுங்கு படுத்திக் கொண்டு தன்னைப்பற்றி தெளிவாகத் தெரிந்து கொண்டு பூரண நிலையைப் பெற்று வாழ்வாங்கு வாழமுடியும்.
அகத்தவத்தால் ஐம்பலனை அடக்கி அறிவறிந்திடலாம் !
அகத்தவத்தால் ஆறுகுண ஆளுமைப் பேறடைந்திடலாம் !
அகத்தவத்தால் இல்லறத்தை அன்பகமாய் ஆற்றிடலாம் !
அகத்தவத்தால் அனைத்துயிர்கள் அருநட்பை பெற்றிடலாம்.
பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருக்க கூடிய மனத்தின் பழக்கத்தை முறையாக மாற்றிக் கொள்ள, நல் விளக்கத்தை பெற்று அதன் வழியே வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முறையான பயிற்சிதான் மனவளக்களை. அதில் உள்ள அனைத்தும் தவத்தால் மனதில் ஓர்மை, கூர்மை, நேர்மை என மாற்றப்பெறுவதால் குடும்பத்தில் அனைவரும் அமைதிகாத்து வாழ முடியும்.
March 8, 2010 at 2:14 PM
இந்துதர்மத்தின் நவீனவடிவமே மனவளக்கலை என்பது என் தனிப்பட்ட கருத்து.இப்படிக்குwww.aanmigakkadal.blogspot.com